புதுதில்லி: வடமேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு வங்கக் கடலில் நாளை உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்து புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி முன்கூட்டியே உருவாகியுள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தெலங்கானா, ஆந்திரம், மகாராஷ்டிரம், சத்தீஸ்கரில் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தெற்கு, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும். வடமேற்கு, வட தில்லி, ஜிந்த், ரோஹ்தக், கைதால், ரேவாரி, பவல், திசாரா, கஸ்கஞ்ச், பரத்பூர், நாட்பாய், பர்சனா போன்ற பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான கனமழை பெய்யக்கூடும்.
பெருமழையால் ஏற்கனவே மும்பை பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் மகாராஷ்டிரம் மாநிலத்திற்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.