மடிக்கும் வகையிலான ஓப்போ போன் விரைவில் அறிமுகம்
ஓப்போ நிறுவனம் தனது முதல் மடிப்பு ஸ்மார்ட்போனை ஜூன் மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தவுள்ளது.


ஓப்போ நிறுவனம் தனது முதல் மடிப்பு ஸ்மார்ட்போனை ஜூன் மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் மடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு காட்சிப்படுத்தப்பட்ட ஒப்போ எஃஸ் 2021 வகையிலானது கிடையாது. இருப்பினும், எஃஸ் 2021 வகை ஸ்மார்ட் போனும் விரைவில் அறிமுகமாகும் எனத் தெரிவித்துள்ளனர்.
சியோமி, விவோ, கூகுள் நிறுவனங்களும் மடிக்கும் வகையிலான போனை அறிமுகம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போனை வடிவமைத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஓப்போ போன், மேலிருந்து கீழே மடிக்கும் வகையிலும், 7.7 அங்குலம் உள்புற காட்சித்திரையும், 1.5 முதல் 2 அங்குலம் வரையிலான வெளிபுற திரையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...