தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையால் இதுவரை 3,070 காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கரோனா இரண்டாம் அலையால் தமிழகத்தில் நாள்தோறும் 30 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இரண்டாம் அலையில் மட்டும் இதுவரை 3,070 காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 70 காவலர்கள் சிகிச்சை பலனளிக்காமல் பலியாகியுள்ளனர்.
மேலும், 1,722 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.