இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியது, கருப்பு பூஞ்சை நோய் என்பது புதிதல்ல. பல காலமாக அத்தகைய பாதிப்பு இருந்து வருகிறது. வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இந்நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது அம்மருத்துவமனையில் 40க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 10 பேர் மட்டுமே வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் அருகே உள்ள மாவட்டங்களையும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தவிர, கருப்பு புஞ்சை பாதித்தவர்களில் 13 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பும் உள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், மாவட்டத்திலுள்ள வேறு அரசு, தனியார் மருத்துவமனைகளில் கருப்பு புஞ்சை பாதிப்பால் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றனர்.