மானாமதுரை நகர்மன்றத் தலைவர், திருப்புவனம், இளையான்குடி பேரூராட்சி மன்றத் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி திருப்புவனம், இளையான்குடி பேரூராட்சித் தலைவர்கள் வெள்ளிக்கிழமை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி திருப்புவனம், இளையான்குடி பேரூராட்சித் தலைவர்கள் வெள்ளிக்கிழமை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இளையான்குடி பேரூராட்சி மன்றத் தலைவராக திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட செய்யது ஜெசிமாவுக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.
மானாமதுரை நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் அதிமுக 14 இடங்களில் வென்று நகர்மன்றத் தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது.
மேலும் பல சுயேச்சைகள் திமுகவை ஆதரிக்கின்றனர். இந்நிலையில் தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாரியப்பன் கென்னடி நகர்மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதிமுக தரப்பில் யாரும் போட்டியிடாததால் மாரியப்பன் கென்னடி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ஆணையாளர் கண்ணன் தெரிவித்தார்.

திருப்புவனம் பேரூராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட த.சேங்கைமாறனுக்கு கட்சியினர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் மாரியப்பன் கென்னடிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். இதேபோல் திருப்புவனம் பேரூராட்சி மன்றத்தின் தலைவராக திமுகவின் மாவட்ட துணைச் செயலாளர் த.சேங்கைமாறன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட இவருக்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.
இளையான்குடியில் பேரூராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த செய்யது ஜெமிமா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...