தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தல் வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பிற்பகல் 4 மணி வரை வேட்புமனுக்கள் வழங்கப்படவில்லை. தேர்தல் நடத்துவதும் தாமதமானது. கடைசியாக தேர்தல் அலுவலரும் செயல் அலுவலருமான சுப. சத்தியமூர்த்தி கூறியதாவது:
கவுன்சிலர்கள் 18 பேரில் துணைத் தலைவர் தேர்தலுக்கு 10 பேர் வாக்களிக்க வேண்டும். ஆனால் 7 பேர் மட்டுமே வந்து வாக்களிக்க வந்திருப்பதால் தேர்தலை, மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.