மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

பிரதமர் மோடியின் ஊடக விவகாரங்களைக் கவனிப்பவர்களில் ஒருவர் எனக் கூறப்படும் நிலையில் அபய் ஓஜா விலகியுள்ளார்.

News image
Updated On :6 மே 2024, 10:34 am

இணையதளச் செய்திப் பிரிவு

 ஜீ மீடியா கார்ப்பரேஷன் (ஜீ நியூஸ்) நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் அபய் ஓஜா பதவியிலிருந்து ராஜிநாமா செய்தார்.

கடந்த சனிக்கிழமை பிற்பகலுடன் நிறுவனத்தில் அவருடைய பணிகள் முடிவுக்கு வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓஜாவின் பதவி விலகல் தொடர்பாக, மே 4 ஆம் தேதி மின்னஞ்சல் வழி பணியாளர்களுக்கு ஜீ மீடியா நிறுவனம் தகவல் தெரிவித்தது. இவருக்குப் பதிலாக இடைக்கால ஏற்பாடாக இத்ரிஸ் லோயா பொறுப்பேற்றுள்ளார்.

2023 பிப்ரவரியில் ஜீ மீடியாவில் இணைந்த அபய் ஓஜா, இதற்கு முன் ஸ்டார் டிவி, இன்டஸ்இந்த் மீடியா போன்றவற்றில் பதவி வகித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் ஊடக விவகாரங்களைக் கவனித்துக் கொள்வதில்  மோடியின் வலது கரம் போன்றவர் இவர் என்று கூறப்படுகிறது. இவருடைய திடீர் விலகலுக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இவருடன் சேர்த்து மேலும் சிலரை ராஜிநாமா செய்யுமாறு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவிவருகின்றன.

இதனிடையே, மே 4 ஆம் தேதி உலக பத்திரிகை சுதந்திர நாளையொட்டி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட செய்தியில் ஜீ மீடியாவின் சுபாஷ் சந்திர, ‘ஜனநாயகத்தை உயர்த்திப் பிடிப்பதிலும் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதிலும் தகவல் அறியும் உரிமையைப் பாதுகாப்பதிலும் சுதந்திரமான ஊடக உலகின் ஆற்றலைக் கொண்டாடுவோம். ஊடகத் தொழிலின் ஒருங்கிணைந்த பகுதியாக, உண்மை, பொறுப்புணர்வு ஆகியவற்றில் உலகிலுள்ள அனைத்து பத்திரிகையாளர்களில் ஒருவனாக உடன் நிற்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.