ராகுல் காந்தி பேசாமல் ஆர்.எஸ்.எஸ் ஸில் இணைந்து விடலாம்: தமிழிசை!

“இலங்கையில் கணக்கில்லாமல் தமிழர்கள் கொல்லப்பட்ட போது ராகுல் காந்தி எங்கே போனார்? என்று கூறி விட்டு. கீதை படிப்பதை விட்டு விட்டு பேசாமல் ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைந்து விடலாம்.
ராகுல் காந்தி பேசாமல் ஆர்.எஸ்.எஸ் ஸில் இணைந்து விடலாம்: தமிழிசை!
Published on
Updated on
1 min read

திமுக தலைவர் கருணாநிதியின் 94 வது பிறந்தநாளை ஒட்டி அவரது சட்டப்பேரவை வைரவிழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வுக்காக சென்னை வந்த ராகுல் காந்தி விழாவில் பேசும் போது; பாஜக வுக்கும், ஆர்.எஸ்.எஸ் ஸுக்கும் தகுந்த பதிலடி கொடுக்கவே தான் பகவத் கீதையையும், உபநிடதங்களையும் வாசித்து அறிந்து கொண்டிருப்பதாகக் கூறினார். அது மட்டுமல்ல மேடையில் பேசுகையில் அவர்; ‘தமிழ் எனக்குப் பிடிக்கும்’ என்றும் கூறினார்.

ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை; “இலங்கையில் கணக்கில்லாமல் தமிழர்கள் கொல்லப்பட்ட போது ராகுல் காந்தி எங்கே போனார்? என்று கூறி விட்டு. கீதை படிப்பதை விட்டு விட்டு பேசாமல் ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைந்து விடலாம். அப்போது தான் அவருக்கு சரியான புரிதல் கிடைக்கும்” எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com