மதுரையில் இன்று மாலை பெய்த கனமழையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் வெள்ளம் புகுந்தது. சுமார் இரண்டு மணி நேரம் வரலாறு காணாத கனமழை பெய்த காரணத்தால், என்றுமில்லாத வகையில் முதன் முறையாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலினுள் தங்கக் கொடிமரம் அமைந்துள்ள கம்பத்தடி மண்டபத்துக்குள் வெள்ளம் புகுந்து ஆறாக ஓடியதின் வீடியோ பதிவு இது...
இதற்கு முந்தைய காலங்களில் ஆடி வீதிகளில் வெள்ளம் புகுந்திருக்கிறதே தவிர...கோயிலுக்குள் கம்பத்தடி மண்டபத்தில் வெள்ளம் புகுந்தது இதுவே முதல் முறை என்கிறார்கள் மதுரைவாசிகள்.
ஷாங்காயில் 14 வருடங்களாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வீடு இடிப்பு!
லைசென்ஸ் இல்லாதவர்களுக்கு இனி வாகனங்கள் விற்பனை கூடாதென போக்குவரத்து கமிஷனர் உத்தரவு!
மிதமிஞ்சிச் சிரித்ததால், நிலைதடுமாறி மாடியிலிருந்து விழுந்து இறந்த ஆசிரியை!
திறந்தவெளியில் மலம் கழித்தால், வீட்டுக்கு மின்சாரம் ரத்து... ஸ்வச் பாரத் மிரட்டல்!