ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார் ராணுவ வீரர் குடும்பத்துக்கு முதல்வர் நிதி உதவி

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த  ராணுவ வீரர் பாலாஜி குடும்பத்திற்கு  இருபது  லட்சம் ரூபாய்  நிதி உதவி உடனடியாக வழங்க முதல்வர் உத்தரவு
Updated on
1 min read

அருணாசலபிரதேசம் தவாங் மாவட்டம் யாகேஷ் செக்டாரில் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் நேற்று (6.10.2017)  விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரெஜிமெண்ட் ராணுவ வீரர் பாலாஜி உள்பட 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்த விபத்து குறித்து செய்தி அறிந்ததும்  நான் மிகுந்த துயரமும்,  மன வேதனையும்  அடைந்தேன் . மேலும்  ராணுவ வீரர் பாலாஜி-யை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். பாலாஜி குடும்பத்திற்கு  இருபது  லட்சம் ரூபாய் நிதி உதவி உடனடியாக  வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com