இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புடைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

மோடி, அமித்ஷாவை விமரிசித்து பதிவிட்டதால் ராப் பாடகியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்... பாய்ந்தது தேச துரோக வழக்கு!

ஹார்ட் கெளர் இப்படி ஆளும் தரப்பைக் கேலி செய்து சமூக ஊடகங்களில் பதிவிடுவது முதன்முறை அல்ல. இதற்கு முன்பே அவர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டு  எச்சரிக்கைக்கு

News image
Updated On :22 ஜூலை 2025, 4:48 pm IST

ராப் பாடகி ஹார்ட் கெளரின் ட்விட்டர் கணக்கு நேற்று செவ்வாய் அன்று முடக்கப்பட்டது. அவர் காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் இணைந்து கொண்டு  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரையும் கடுமையாக விமர்சித்தும், கேலி செய்தும் ட்விட்டரில் பதிவிட்டு வந்ததால் அதைக் கண்டிக்கும் வகையில் அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல். 

ஹார்ட் கெளர் இப்படி ஆளும் தரப்பைக் கேலி செய்து சமூக ஊடகங்களில் பதிவிடுவது முதன்முறை அல்ல. இதற்கு முன்பே அவர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டு  எச்சரிக்கைக்கு உள்ளானவரே! அவர்களை மட்டுமல்ல ஆர் எஸ் எஸ் தலைமை நிர்வாகியான மோகன் பகவத் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டவர் தான் இவர்.

இதன் காரணமாகத் தற்போது கெளர் மீது தேசத்துரோக வழக்குப் பதியப்பட்டுள்ளது.

வரலாற்றில் மகாத்மா காந்தி, மகாவீரர் போன்ற தலைவர்கள் பிராமணர்களின் வர்ணாசிரம முறையை எதிர்த்துப் போராடி தேசத் தலைவர்கள் ஆனார்கள், அந்த வகையில் பார்த்தால் நீங்களொன்றும் தேசப்பற்று கொண்டவரெல்லாம் இல்லை’ என்று மோகன் பகவத்தின் புகைப்படத்துடன் நக்கலாகப் பதிவிட்டு ஆர் எஸ் எஸ் தொண்டர்களின் கடும் கோபத்திற்கு ஆளானார்.

அதுமட்டுமல்ல, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வந்ததால், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் அடிப்படையில் ஹார்ட் கெளர் மீது பலவேறு பிரிவுகளின் கீழ் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹார்ட் கெளர், ஓகே ஜானு, அக்லி ஒளர் பக்லி மற்றும் பாட்டியாலா ஹவுஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

Related Article

ஸ்ரீராமனின் வம்சாவளியினர் யார்? இப்போது எங்கு இருக்கிறார்கள்? உச்சநீதிமன்ற கேள்விக்கான  எதிர்வினைகள்!

பத்மா சேஷாத்ரி கல்விக் குழுமத் தலைவர் ராஜலட்சுமி பார்த்தசாரதி மறைவு!

‘ஸ்டாலின், வைகோ கெமிஸ்ட்ரி’ கேள்விக்கு வைகோவின் பதில்!

‘ஸ்பா’ சென்ட்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 35 வெளிநாட்டுப் பெண்கள் கைது!

பெங்களூரில் ஓலா, உபேர் வாகனச் சேவை முறைகேடுகளுக்குச் ’செக்’ வைத்த கர்நாடக போக்குவரத்துத் துறை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.