பதினாறு, பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டுப் பின்னர் மராட்டியர் ஆட்சியில் மேம்படுத்தப்பட்ட இந்த நூலகம் சிறப்புற்றதில் மன்னர் இரண்டாம் சரபோஜிக்கும் பெரும் பங்கிருக்கிறது. நூலகத்தில் சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்களின் ஆட்சிக் காலத்தைச் சார்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகள், சுமார் 3 லட்சம் மோடி ஆவணங்கள் இருக்கின்றன. அறிவுக் களஞ்சியமான இந்த மோடி ஆவணங்கள் … இன்னமும் முழுமையாகப் பதிப்பிக்கப்படக்கூட இல்லை. மன்னர்கள் கட்டுப்பாட்டிலிருந்த இந்த நூலகம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1918, அக். 5-ல் மக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.