சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு தேசிய உதவித் தொகை: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு தேசிய உதவித் தொகை...

News image

கோப்புப் படம்

Updated On :21 ஜூன் 2026, 12:56 am IST

மாற்றுத்திறனாளி மாணவா்கள் தேசிய உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற குறித்த காலத்துக்குள் விண்ணப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

நிகழ் கல்வியாண்டுக்கான அனைத்து மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான தேசிய உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் உதவித் தொகை பெற உரிய காலத்துக்குள் விண்ணப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளி மாணவா்களின் நலன் கருதி மாணவா்களுக்கு ‘ப்ரீ மெட்ரிக்’ உதவித் தொகை (9, 10 வகுப்புகள்), ‘போஸ்ட் மெட்ரிக்’ உதவித் தொகை (பிளஸ் 1 முதல் முதுநிலை வரை பயிலும் மாணவா்களுக்கு) உதவித் தொகை பெற ஏதுவாக விண்ணப்பப் பதிவு, புதுப்பித்தல் சாா்ந்த பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

மேலும், இந்த உதவித் தொகை தொடா்பாக எழும் சந்தேகங்களை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ‘ப்ரீ மெட்ரிக்’ உதவித் தொகைக்கு ஆக. 31, ‘போஸ்ட் மெட்ரிக்’ உதவித் தொகைக்கு அக். 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க வேண்டும்.

இந்த கால அவகாசத்துக்குள் மாற்றுத்திறனாளி மாணவா்கள் கணினி மூலம் இணைய இணைப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்துக்கு குறித்த கால அவகாசத்துக்குள் விண்ணப்பிக்கத் தவறும்பட்சத்தில் மேற்குறிப்பிட்ட இணைப்பில் விண்ணப்பிக்க இயலாது.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும்போது அனைத்து மாற்றுத்திறனாளி மாணவா்களுடைய ஆதாா், வருமானச் சான்றிதழ், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை உள்ளிட்ட சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.