

இத்தாலி முன்னாள் அதிபரும், முன்னாள் பிரதமருமான கார்லோ அசுக்லியோ சியாம்பி(95) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 95
இத்தாலியின் 1௦-வது குடியரசுத்தலைவராக 1999 முதல் 2006-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். இதுதவிர இத்தாலியின் மத்திய வங்கி ஆளுநராகவும் பதவி வகித்தார். ஐரோப்பாவின் ஒற்றை நாணய முறையை அறிமுகப்படுத்தியதில் சியாம்பிக்கு முக்கிய பங்குண்டு.
தனது வாழ்நாளில் ஏராளமான பதவிகளையும், பட்டங்களையும் அலங்கரித்த சியாம்பி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இதனை அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அன்னாரின் மறைவுக்கு இத்தாலி பிரதமர் மட்டோ ரென்சி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.