நெல்லித்தோப்பு தொகுதி காலி என்ற அரசு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியை காலி என அரசு வெளியிட்ட அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என வழக்குரைஞர் எஸ்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Updated on
1 min read

புதுச்சேரி, 

புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியை காலி என அரசு வெளியிட்ட அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என வழக்குரைஞர் எஸ்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி தேர்தலில் போட்டியிடாமலேயே முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது அவர் 6 மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற வேண்டும்.


இந்நிலையில் தற்போது நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் கடந்த 15-ம் தேதி ராஜிநாமா செய்துள்ளார். அப்போது அவர் முதல்வர் நாராயணசாமிக்காக தனது பதவியை விட்டு விலகியதாக தெரிவித்தார். உடனே அவரது ராஜிநாமா ஏற்கப்பட்டு தொகுதி காலி என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இது சட்டத்தை மீறிய செயலாகும். அரசு உடனே அந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என தலைமைச் செயலாளரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஜான்குமார் வீட்டில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.1.6 கோடியை பறிமுதல் செய்துள்ளனர். தேர்தலுக்காக அவர் முதல்வரிடம் பணம் வாங்கியுள்ளார் என புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என சிபிஐயிடம் புகார் அளித்துள்ளேன்.

மேலும் நெல்லித்தோப்பு தொகுதி இடைத் தேர்தலை 6 மாதங்கள் கழித்து தான் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடமும் மனு அளித்துள்ளேன். இவற்றை நிறைவேற்றாவிட்டால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன் என்றார் சுப்பிரமணியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com