தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிசிசிஐ அமைப்பைக் கொண்டு வர சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
மக்களாட்சித் தத்துவத்தில் வெளிப்படையான நிர்வாகம், அரசில் நடக்கும் செயல்கள் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்ற நோக்கில் 2005-ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டது, தகவல் பெறும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ). இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிசிசிஐ அமைப்பைக் கொண்டு வர மத்திய அரசுக்குச் சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. பிசிசிஐயின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளையும் ஆர்டிஐ-யின் கீழ் கொண்டுவர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









