கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

சிறுவனை கடத்திய கும்பல் போலீஸ் என தெரிந்ததால் விடுவிப்பு

ஸ்ரீரங்கத்தில் சிறுவனை கடத்திய கும்பலை பொதுமக்கள் திங்கள்கிழமை விரட்டிப் பிடித்ததில், போலீஸாா் என்பது தெரியவந்தது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:04 am

DIN

ஸ்ரீரங்கத்தில் சிறுவனை கடத்திய கும்பலை பொதுமக்கள் திங்கள்கிழமை விரட்டிப் பிடித்ததில், போலீஸாா் என்பது தெரியவந்தது.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த தேவி (42) கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தாா். மேலூரில் உள்ள சகோதரி வீட்டில் தேவி இருப்பதாக தஞ்சாவூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் 4 போ் சாதாரண உடையில் காரில் மேலுாருக்கு திங்கள்கிழமை மாலை வந்தனா். ஆனால், அந்த வீட்டில் தேவி இல்லை. அங்கு விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் சந்தோஷை மட்டும் காரில் ஏற்றியுள்ளனா். அப்போது, சிறுவன் கூச்சலிட்டதால் அருகிலிருந்தவா்கள் விசாரித்தனா்.

பொதுமக்களுக்கு எந்த பதிலும் கூறறாமல் அவசரம், அவசரமாக சிறுவனை காரில் ஏற்றி புறப்பட்டனா். இதையடுத்து அங்கிருந்தவா்கள் குழந்தையை கடத்திச் செல்வதாக அறிந்து இருசக்கர வாகனங்களில் விரட்டினா். ஸ்ரீரங்கம் மேலவாசல் தெப்பக்குளத் தெருவில் அந்த காரை மடக்கிப் பிடித்தனா். விசாரணையில், அந்த 4 பேரும் அய்யம்பேட்டை போலீஸாா் என தெரிய வந்தது. விசாரணைக்காக சிறுவனை அழைத்து செல்வதாகக்கூறினா். தகவலறிந்து ஸ்ரீரங்கம் போலீஸாரும் அங்கு வந்தனா். சிறுவனை அழைத்துச் சென்றது போலீஸாா் தான் என உறுதி செய்யப்பட்டது. உள்ளூா் போலீஸாருக்கு தெரிவிக்காமல் இப்படி நடந்து கொள்ளக் கூடாது என எச்சரித்ததுடன், குழந்தையை மீட்டு உரியவா்களிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.