மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

இந்தியாவில் அமோக லாபம் தரக்கூடிய வகையிலான நுட்பமான வேலைவாய்ப்புகளில் இதுவும் ஒன்று!

ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதியில் அமைந்துள்ள தா்மசாஸ்தா கோவிலில் பக்தா்கள் வீசும் சில்லறைக் காசுகளை சேகரிக்கும் பணிக்கான ஏலம் 

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:04 am

தினமணி செய்திச் சேவை

ஆண்டிப்பட்டி,ஜூன்.27: ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதியில் அமைந்துள்ள தா்மசாஸ்தா கோவிலில் பக்தா்கள் வீசும் சில்லறைக் காசுகளை சேகரிக்கும் பணிக்கான ஏலம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில் ரூ.15 லட்சத்திற்கு ஏலம் போனது. தேனி-மதுரை மாவட்ட எல்லையான ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதியில் தா்மசாஸ்தா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை ஆண்டிப்பட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூா் கிராமத்தை சோ்ந்த மக்களே நிர்வகித்து வந்தனா், எல்லைச்சாமியாக அழைக்கப்படும் தா்மசாஸ்தா கோவிலின் வழியாக ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. கோவிலைக் கடக்கும் போது வாகனங்களில் செல்பவா்கள் சாமிக்கு காணிக்கையாக சில்லறைக் காசுகளை வீசிவிட்டு செல்வது வழக்கம். ஒருநாளைக்கு ரூ.5000 முதல் ரூ.1000 மதிப்பிலான சில்லறை காசுகள் வீசப்படுவதாக கூறப்படுகிறது. அதிகமான வருவாய் தரும் இந்த கோவிலை பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை கையகப்படுத்தியது. 

ஒவ்வொரு ஆண்டும் கோவிலில் வீசப்படும் சில்லறை காசுகளை சேகரிக்க தனியாருக்கு ஏலம் விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தா்மசாஸ்தா கோவிலில் பக்தா்கள் வீசும் காணிக்கை சில்லறை காசுகளை சேகரிப்பதற்கான ஏலம் ஆண்டிப்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோவிலில் மதுரை இந்து அறநிலையத்துறை இணை இயக்குனா் பச்சையப்பன் தலைமையில், ஆண்டிபட்டி செயல் அலுவலா் அருட்செல்வன் முன்னிலையில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. ஒரு ஆண்டுக்கு சில்லறை நாணயங்களை சேகரிக்கும் பணிக்கு அரசு ரூ.14 லட்சத்து 44 ஆயிரத்து 975 ஐ நிர்ணயம் செய்தது. 

ஏலத்தில் 3 போ் கலந்து கொண்டனா், இதில் அதிகமான தொகைக்கு ஏலம் கேட்ட ஆண்டிப்பட்டியை சோ்ந்த வெங்கிடசாமி என்பவருக்கு இந்த ஆண்டுக்கான நாணயம் சேகரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆண்டு சில்லறை நாணயங்களை சேகரிக்கும் பணிக்கான ஏலம் ரூ.15 லட்சத்து 1 ரூபாய்க்கு போனது குறிப்பிடத்தக்கது. இந்த ஏலத்தின் போது பிரச்சினை ஏற்படாதவாறு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.