டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

உயிர்மை சுஜாதா அறக்கட்டளை வழங்கும் சுஜாதா விருதுகள் 2019!

உலக புத்தக தினத்தில் 2019 ஆம்  ஆண்டிற்கான சுஜாதா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:13 pm IST

உலக புத்தக தினத்தில் 2019 ஆம்  ஆண்டிற்கான சுஜாதா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உயிர்மை பதிப்பகமும் சுஜாதா அறக்கட்டளையும் ஆண்டுதோறும் ஆறு பிரிவுகளில் வழங்கி வரும் இந்த விருதுகளுக்கு இந்த ஆண்டு பத்துபேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 18 பேர் கொண்ட நடுவர் குழு இந்த விருதுக்குரியவர்களை தேர்வு செய்தது. பாராட்டுப்பத்திரமும் பரிசுப்பணமும் கொண்ட இந்த விருதுகள் வரும் மே 3ஆம் தேதி சுஜாதா பிறந்த தினத்தன்று மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறும் விழாவில் வழங்கப்படவிருக்கின்றன.

விருது பெற்றோர்:

சுஜாதா நாவல் விருது 2019

உயிர்நதி – சிவபாலன் இளங்கோவன் (உயிர்மை பதிப்பகம்)

சுஜாதா உரைநடை விருது 2019

கையிலிருக்கும் பூமி – சு.தியடோர் பாஸ்கரன் (உயிர்மை பதிப்பகம்)

சுஜாதா கவிதை விருது 2019 – (இருவருக்கு)

வேனிற்காலத்தின் கற்பனைச் சிறுமி – ராஜேஷ் வைரபாண்டியன் (உயிர்மை பதிப்பகம்)

நொதுமலர்க் கன்னி – மௌனன் யாத்ரிகா (டிஸ்கவரி புக் பேலஸ்)

சுஜாதா சிறுகதை விருது 2019 – (இருவருக்கு)

பாகேஸ்ரீ – எஸ்.சுரேஷ் (யாவரும் பப்ளிஷர்ஸ், பதாகை)

திருக்கார்த்தியல் – ராம் தங்கம் (வம்சி புக்ஸ்)

சுஜாதா இணைய விருது 2019 (இருவருக்கு)

http://www.philosophyprabhakaran.com/ – N.R.பிரபாகரன்

http://vasagasalai.com/ – வாசகசாலை

சுஜாதா சிற்றிதழ் விருது 2019 – (இருவருக்கு)

உயிர் எழுத்து – ஆசிரியர் : சுதீர் செந்தில்

நடுகல் – ஆசிரியர் : வா.மு.கோமு

நன்றி - உயிர்மை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.