வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

இந்தியர்களின் எச்-1பி விசா காலத்தை நீட்டிக்கவும்: அமெரிக்காவிடம் வேண்டுகோள்

உலகளாவிய கரோனா நோய்த் தொற்றுப் பிரச்னை முடியும் வரையிலும் இந்தியர்களுக்கு வழங்கியுள்ள எச்1-பி மற்றும் பிற விசாக்களின் காலத்தை நீட்டிக்க  வேண்டும் என்று அமெரிக்காவிடம் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

News image
Updated On :11 ஏப்ரல் 2020, 1:31 pm

DIN

உலகளாவிய கரோனா நோய்த் தொற்றுப் பிரச்னை முடியும் வரையிலும் இந்தியர்களுக்கு வழங்கியுள்ள எச்1-பி மற்றும் பிற விசாக்களின் காலத்தை நீட்டிக்க  வேண்டும் என்று அமெரிக்காவிடம் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

எச்-1பி விசா பெற்றிருப்பவர்களின் சேவைகளை முடித்துக் கொள்ளுமாறு நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளதாக வெளியான சில செய்திகளைத் தொடர்ந்து டிரம்ப் அரசிடம் இந்த வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரையிலும் இதுபோன்ற எந்தவொரு ஆணையோ அறிவுறுத்தலோ அமெரிக்க அரசால் பிறப்பிக்கப்படவில்லை என்றபோதிலும் எச்-1பி விசாக்கள் பெற்றுப் பணியாற்றுவோரைத் தொடரச் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம் என்று தில்லி வட்டாரங்கள் குறிப்பிட்டன.

இவ்விஷயமாக, அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஸ்டீபன் பெய்கனுடன் தொலைபேசியில் இந்திய வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் ஸ்ரீங்கல பேசியதாகவும் தில்லியிலுள்ள உயர் நிலை அரசு அலுவலர் ஒருவர் தெரிவித்தார். 

அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்று சுமார் 3 லட்சம் இந்தியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்றுள்ள ஓர் ஊழியரின் பணி ஒப்பந்தத்தைக் குறிப்பிட்ட நிறுவனம் ரத்து செய்துவிட்டால், அவர் அடுத்த 60 நாள்களுக்குள் வேறு பணியைத் தேடிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் விசா அனுமதி ரத்தாகி, இந்தியா திரும்ப நேரிடும்  என்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.