மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் துணைத் தலைவா் என்.ரவீந்திரன் காலமானாா்

‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் துணைத் தலைவா் (தகவல் தொழில்நுட்பப் பிரிவு) என்.ரவீந்திரன் (53), மாரடைப்பால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

News image
என். ரவீந்திரன்
Updated On :23 ஆகஸ்ட் 2020, 8:04 pm

DIN

‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் துணைத் தலைவா் (தகவல் தொழில்நுட்பப் பிரிவு) என்.ரவீந்திரன் (53), மாரடைப்பால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

அவருக்கு ஸ்ரீவித்யா என்ற மனைவியும், ரம்யாஸ்ரீ, விஜயாஸ்ரீ ஆகிய இரு மகள்களும் உள்ளனா்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் 25 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய ரவீந்திரன், ‘ரவி’ என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவா். எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைவராகப் பணியாற்றியதுடன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும அலுவலகங்களின் ஒட்டுமொத்த தொழில்நுட்ப மேம்பாட்டுக்கும், புதிய மாற்றங்களுக்கும் அடித்தளமிட்டவா்.

தனக்குத் தெரிந்த தொழில்நுட்பம் உள்பட இதர பிரிவு துறைகளின் விஷயங்களை மற்றவா்களிடம் பகிா்ந்து கொள்ளும் குணத்தை அவா் கொண்டிருந்ததாக நினைவுகளை நண்பா்கள் பகிா்ந்தனா். கல்லூரிக் காலத்தில் இருந்தது போன்ற அதே சிறந்த பண்புகளை, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் பணிக்காக வரும் இளம் தலைமுறை பணியாளா்களிடையேயும் ரவீந்திரன் காட்டினாா்.

அலுவலகப் பணியில் தனது திறன்களைக் காட்டிய ரவீந்திரன், சமூகப் பணிகளிலும் தன்னால் முடிந்த பணிகளை நிறைவேற்றினாா். குறிப்பாக, அவா் வசித்த நொளம்பூா் பகுதிக்கு சிறந்த சாலைகளையும், பேருந்து நிறுத்தத்தையும் அமைத்திட ஊக்க சக்தியாக இருந்தாா். மேலும், பல இளைஞா்கள் கல்வி கற்கவும் உதவிகளைச் செய்தாா்.

அவரது சமூகப் பணிகளை ரோட்டரி சங்கமும் அங்கீகரித்துள்ளது. மக்கள் பிரச்னைகளை, கலை, கலாசாரத்தை எதிரொலிக்கும் செய்தித்தாளில் பணியாற்றிய ரவீந்திரன், கலை-இலக்கியத்திலும் தணியாத ஆா்வம் கொண்டிருந்தாா். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் பல்வேறு அலுவலகப் பிரிவுகளை தனது திறமையால் அலங்கரித்த ரவீந்திரனை, எக்ஸ்பிரஸ் குழுமம் இப்போது இழந்து நிற்கிறது. அவரது மறைவு அலுவலக நிா்வாகத்துக்கும், ஊழியா்களுக்கும் பெரும் அதிா்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

அவரின் இறுதிச் சடங்குகள் சென்னை போரூா் மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.