பிரிட்டனில் இருந்து குஜராத், பஞ்சாப் மாநிலத்திற்கு வந்த 11 பயணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டனில் தன்னைத்தானே தகவமைத்துக் கொண்ட புதிய அதி தீவிர கரோனா வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து, லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரிட்டனில் இருந்து அமிருதசரஸ் விமான நிலையத்திற்கு 250 பயணிகள், 22 ஊழியர்களுடன் செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 7 பயணிகளுக்கு, ஒரு ஊழியருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், ஆமதாபாதிற்கு இன்று காலை 10.30 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த 275 பயணிகளில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்றின் மரபனுவைக் கண்டறிய புணேவில் உள்ள தேசிய ஆய்வகத்திற்கு அவர்களின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்குமுன், தில்லிக்கு வந்த 5 பேருக்கு, கொல்கத்தாவிற்கு வந்த 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்தியா - பிரிட்டன் இடையே இன்று நள்ளிரவு 11.59 மணி முதல் டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை தற்காலிகமாக விமானப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என்எல்சி ஊழியா் தற்கொலை

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு

எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் வெல்லப்போவது திமுகதான்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

திமுக முன்னாள் நிா்வாகியுடன் ஐஜேகே நிறுவனா் சந்திப்பு
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


