வெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்?
/

தூத்துக்குடி பொ. கைலாசமூர்த்தி காலமானார்

2009-ல் தமிழ்நாடு அரசு வழங்கிய "கலைமாமணி" விருது மற்றும் 2004-ல் மாவட்ட அளவில் வழங்கப்படுகிற "கலைநன்மணி" விருதுகளை பெற்ற த பொ. கைலாசமூர்த்தி(75) மாரடைப்பால் இன்று காலமானார். 

News image
Updated On :10 ஜூலை 2020, 10:25 pm IST

2009-ல் தமிழ்நாடு அரசு வழங்கிய "கலைமாமணி" விருது மற்றும் 2004-ல் மாவட்ட அளவில் வழங்கப்படுகிற "கலைநன்மணி" விருதுகளை பெற்ற தூத்துக்குடி மட்டக்கடை அய்யலுதெருவை சேர்ந்த பொ. கைலாசமூர்த்தி(75) மாரடைப்பால் இன்று (வெள்ளிக்கிழமை) காலமானார். 

அகில இந்திய வானொலி திருநெல்வேலி நிலையத்தின் கலைஞர்கள் தேர்வு குழு உறுப்பினர், பாளை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறையில் "கிராமிய கலை ஆசிரியர்', அத்துறை நடத்துகிற பல்வேறு கிராமிய கலை விழாக்களில் 'சிறப்பு நடுவர்' இவை எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் பல்வேறு அரசியல் தொழிற்சங்க சமூக போராட்ட இயக்கங்களின் பிரதான பிரச்சாரக் கலைஞர் என அவர் நிகழ்த்தி வந்த சாதனைகள் ஏராளம். 

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் 'மண்ணின் பாடல்கள்', அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் 'தன்னானே', மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின்  ' விடியல் காண ' ஆகிய ஒலிப்பேழைகளில் இவரது குரலை நாம் கேட்கலாம். 

பொதிகை தொலைக்காட்சி தொடர் ஒன்றிலும் ஓரிரு திரைப்படங்களிலும் கூட நடித்து உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.