ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கோயில்களைத் திறக்க மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை வேண்டுகோள்

சமூக இடைவெளியுடன் பக்தர்கள் வழிபட தமிழக கோயில்களைத் திறக்க வேண்டும் என்று அரசை மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது

News image
Updated On :8 மே 2020, 7:36 am

DIN

சமூக இடைவெளியுடன் பக்தர்கள் வழிபட தமிழக கோயில்களைத் திறக்க வேண்டும் என்று அரசை மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

இதுபற்றி மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவையின் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன்  தெரிவித்துள்ளதாவது:

"ஊரடங்கு அறிவித்து சுமார்  40 நாள்கள் கடந்து விட்ட நிலையில், தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறந்துவிட்டிருக்கிறது.

இந்த நிலையில் ஆண்டாண்டு காலமாக பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்த பங்குனி, சித்திரை மாதக் கோயில் திருவிழாக்கள் அனைத்தும் அரசால் தடை செய்யப்பட்டுள்ளன.

உக்கிர தெய்வங்களான பிரத்தியங்கிரா, சரபேஸ்வரர், காலபைரவர்,  சூலினி வழிபாடுகள் எல்லாம் தற்போது தடை செய்யப்பட்டுத் திருவிழாக்கள் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டாஸ்மாக் கடைகளை அரசு திறக்கும்போது, திருக்கோயில்களை சமூக இடைவெளியுடன் பக்தர்கள் வழிபட திறப்பதற்கு எந்த தடையும் இல்லை.

தமிழக அரசு திருக்கோயிலை 33 சதவிகித பணியாளர்களுடன் திறக்கலாம் என உத்தரவிட்டுப் பணியாளர்களைத் தவிர பக்தர்கள் யாரும் கோயிலுக்கு செல்லக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

பணியாளர்களைக் கோவிலுக்குள் அனுமதிக்கும் போது, பக்தர்களை சமூக இடைவெளியுடன் இறைவனை வழிபட அனுமதிப்பதில் தவறில்லை.

பல நூற்றாண்டுகளாக எந்த ஒரு பிரச்சனைக்கும் நடை சாத்தப்படாத திருக்கோயில்கள் அனைத்தும் தற்பொழுது சாத்தப்பட்டிருக்கின்றன.

டாஸ்மாக் கடைகளைத் திறந்து சமூக இடைவெளியுடன் குடிப் பழக்கத்தினர் மது வாங்குவதற்கு உரிய காவல் பாதுகாப்பு கொடுக்கக் கூடிய அரசு,
திருக்கோயில்களையும் திறந்து சமூக இடைவெளியுடன் பக்தர்கள் இறைவனை தரிசிக்கவும் பிரார்த்தனை செய்யவும் உரிய காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என சேயோன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.