3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ராமநாதபுரத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் பலி

ராமநாதபுரம் நகரில் புதன்கிழமை மாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் ஜெப்ரி ரோஹித் (5) உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் மற்றொரு சிறுவன், பெண் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

News image
Updated On :13 மே 2020, 1:14 pm

DIN

ராமநாதபுரம்:  ராமநாதபுரம் நகரில் புதன்கிழமை மாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் ஜெப்ரி ரோஹித் (5) உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் மற்றொரு சிறுவன், பெண் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

ராமநாதபுரத்தில் கடந்த இரு நாள்களாக தொடர்ந்து மழை பெய்துகொண்டிருக்கும் நிலையில் சுவர் இடிந்துவிழுந்துள்ளது.

ராமநாதபுரம் நகர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர்  சுரேஷ்குமார். இவருக்கு இரு மகன்கள். மூத்த மகன் ஜெப்ரி ரோஹித்,  இந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் முதல் வகுப்பு படித்துவந்தார்.

கரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு இருப்பதால் வீட்டில் இருந்த சிறுவன் ஜெப்ரி ரோஹித்தும், இதே பகுதியைச் சேர்ந்த மணீஷ்குமார் (10) உள்ளிட்டோரும்
புதன்கிழமை மாலையில் எம்.எஸ்.கே. நகர் தேவாலயப் பகுதியில் உள்ள ஒரு  
வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அருகே புதிதாக கட்டப்பட்டு பூசாமல் இருந்த சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

சுவர் இடிபாடுகளில் சிக்கி சிறுவர்கள் ஜெப்ரி ரோஹித், மணீஷ்குமார் மற்றும்
பிரிசில்லா (31) என்ற பெண் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்களை அந்தப் பகுதியினர் மீட்டு ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.

சிறுவன் ஜெப்ரி ரோஹித்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியில் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த மணீஷ்குமார், பிரிசில்லா ஆகியோர் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.