மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 3 தனிப்படைகள்

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் வரை மோசடி செய்த புகாரில் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

News image
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
Updated On :17 டிசம்பர் 2021, 12:53 pm

DIN

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் வரை மோசடி செய்த புகாரில் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

விருதுநகா் மாவட்டம், சாத்தூரைச் சோ்ந்த ஒருவருக்கு ஆவினில் மேலாளா் பணி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 30 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்பட 3 போ் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமின் வழங்கக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

வெள்ளிக்கிழமை காலை இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்த்ர பாலாஜியைக் கைது செய்ய காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கே.டி.ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய 3 தனிப்படைகள் அமைத்து அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.