ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கால்வன் மோதலில் 4 வீரர்கள் மரணம்: சீனா ஒப்புதல்

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீன ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.

News image

கல்வான் பள்ளத்தாக்கு

Updated On :19 பிப்ரவரி 2021, 7:22 am

DIN

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீன ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் நடைபெற்று 8 மாதங்களுக்குப் பிறகு சீனா இதனை ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் உயிரிழந்த வீரர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளது.

உயிரிழந்தவர்களுக்கு கெளரவ விருதுகளும், அவர்களது குடும்பத்தினருக்கு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு மத்திய ராணுவ ஆணையம் அறிவித்துள்ளது.

கிழக்கு லடாக் எல்லையின் சில இடங்களில் அண்மையில் இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்னை ஏற்பட்டது. இரு தரப்பும் அங்கு படைகளை குவித்தன. 

இதனிடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ஆம் தேதி சீன தரப்பு ஏற்படுத்திய கண்காணிப்பு கோபுரத்தை இந்திய ராணுவம் அப்புறப்படுத்தியது. இதையடுத்து, இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

கல்வான் பள்ளத்தாக்கில் கற்கள், இரும்புத் தடிகள் பயன்படுத்தப்பட்ட இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். சீன தரப்பில் 35 வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் அந்த மோதலில் 4 வீரர்கள் மரணமடைந்ததாக சீன ராணுவம் தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக சீன செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள சுட்டுரை செய்தியில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். 

உயிரிழந்தவர்களுக்கு கெளரவ விருதுகளும், அவர்களது குடும்பத்தினருக்கு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய ராணுவ ஆணையம் அறிவித்துள்ளது. அவர்களை வழிநடத்திச் சென்று படுகாயமடைந்த கர்னலும் கெளரவப்படுத்தப்பட்டுள்ளார் என்று பதிவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.