மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அருப்புக்கோட்டை மரப் பட்டறையில் தீ விபத்து

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மரப்பட்டறை ஒன்றில் இன்று (சனிக்கிழமை) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள மரச்சாமான்கள் எரிந்து நாசமாயின.

News image
அருப்புக்கோட்டை நாகலிங்கா நகரில் மரப்பட்டறையில் ஏற்பட்ட நெருப்பை அணைக்கும் பணியில் தீயணைப் புத்துறையினர்.
Updated On :19 ஜூன் 2021, 2:15 pm

DIN


அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மரப்பட்டறை ஒன்றில் இன்று (சனிக்கிழமை) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள மரச்சாமான்கள் எரிந்து நாசமாயின. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

அருப்புக்கோட்டை குப்புசாமி ஆசாரி தெருவில் வசிப்பவர் பாலமுருகன்(50). இவர் இப்பகுதியை அடுத்த நாகலிங்கா நகரில் ஒரு தனியார் இடத்தில் மரத்தாலான ஜன்னலகள், கதவுகள், அலமாறி, மேசை உள்ளிட்டவை செய்து தரும் மரப் பட்டறை வைத்துள்ளார். இன்று (சனிக்கிழமை) வழக்கம் போல் தனது பட்டறைப் பணிகளை முடித்துவிட்டு மதியம் 3 மணிக்கு பட்டறையைப் பூட்டி விட்டு பாலமுருகன் தனது வீட்டிற்குச் சென்று விட்டார்.

ஆனால் மாலை 5.30 மணிக்கு இவரது பட்டறையிலிருந்து கரும்புகையுடன் தீ எரிவதாகத் தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் ஜெயப் பாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் சுமார் பல லட்சம் மதிப்புள்ள மரச்சாமான்கள் எரிந்து நாசமாயின. இவ்விபத்து குறித்து நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.