எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கேரளத்தில் 55 இடங்களில் இடதுசாரி கூட்டணி முன்னிலை!

கேரளம் மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (மே 2) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

News image
தேர்தல் ஆணையம்
Updated On :2 மே 2021, 3:29 am

DIN


கேரளம் மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (மே 2) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

கேரளத்தில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இடையே மும்முனைப் போட்டி உள்ளது. கடந்த மாதம் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற தோ்தல் நடைபெற்றது.  நிலையில், வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்படுகின்றன.

இந்தப் பணியில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோ்தல் அலுவலா்கள் ஈடுபடுகின்றனா். 30,281 போலீஸாரும், 3,332 மத்திய படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு முதல்கட்டத் தகவல் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுவதாகவும், மாலை 5 மணி வாக்கில் தோ்தல் முடிவுகள் ஓரளவுக்கு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி டீகாராம் மீனா தெரிவித்தாா்.

மொத்தம் 140 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் ஆட்சி அமைக்க 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்தத் தோ்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்று பெரும்பாலான வாக்குக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. 

ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே மட்டுமே இதுவரை நேரடி போட்டி நிலவும் நிலையில், இந்த முறை பாஜகவும் களமிறங்கியுள்ள நிலையில், கேரளத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.  தற்பொழுது 53 இடங்களில் இடதுசாரி கூட்டணியும்,  காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களிலும். பாஜக 1 இடத்திலும் முன்னணி வகிக்கிறது. 

கேரளாவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரபைத் தேர்தலில் இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.