தற்போதைய செய்திகள்
சென்னை திருவல்லிக்கேணி மகப்பேறு மருத்துவமனையில் தீ விபத்து
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் புதன்கிழமை இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனை கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட ஊழியர்கள் தீயை அணைத்தனர். இந்த திடீர் தீ விபத்தால் அப்பகுதி புகை மண்டலமாக காணப்பட்டது. தீ விபத்தினால் மருத்துவமனை அறையில் இருந்த குழந்தைகள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என மருத்துவமனையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.