தம்மம்பட்டி: வீரகனூரில் சமூக இடைவெளியைக்கடைபிடிக்காத ஹோமியோபதி மருத்துவமனைக்கு சுகாதாரத்துறையினர் சீல் வைத்ததுடன், அபராதமும் விதித்தனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூரில் பழைய பேருந்துநிலையம் அருகே ஹோமியோபதி மருத்துவமனை நடத்தி வருபவர் மருத்துவர் சீத்தாராமன். இவரது மருத்துவமனையில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து அதிகளவில் நோயாளிகள் வந்த வண்ணம் இருந்தனர். அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை, இதனால் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக ,மாவட்ட ஆட்சியர்க்கு புகார் சென்றது.
_.jpeg)
இதனையடுத்து தலைவாசல் வட்டார மருத்துவர் லதீஸ்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் அல்லிமுத்து, கலியபெருமாள், சுந்தரராஜன், என்எம்எஸ் செல்வம் , வீரகனூர் காவல் ஆய்வாளர் சுப்ரமணியன் ஆகியோர் சென்று மருத்துவமனையை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்காததால், மருத்துவனைக்கு ,அதிகாரிகள் குழுவினர் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். மேலும் மருத்துவர் சீத்தாராமனுக்கு ரூ.5000 அபராதம் விதித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வடமலைசமுத்திரத்தில் இறந்த நிலையில் பெண் கரடி மீட்பு

வியாபாரியை மிரட்டி ரூ. 40 லட்சம் பறித்ததாக புகாா்: காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்
பெரியகுளத்தில் மூதாட்டியிடம் நகை திருட்டு

ஆடிப்பெருக்கு காரைக்குடி கோயில் ஊருணிக் கரையில் பெண்கள் சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



