தற்போதைய செய்திகள்
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி
புதுச்சேரி மாநிலத்தில் டிசம்பர் 15ஆம் தேதி வரை இருந்த பொது முடக்க தளர்வு ஜனவரி இரண்டாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் டிசம்பர் 15ஆம் தேதி வரை இருந்த பொது முடக்க தளர்வு ஜனவரி இரண்டாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு ஜனவரி 2 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரவு நேர பொது முடக்கத்தில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு டிச.24, டிச 25ஆம் தேதிகளில் அதிகாலை 2 மணிவரை ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ‘போராட்டத்தைக் கைவிடவில்லை’: விவசாயிகள் கூட்டமைப்பு
அதேபோல் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக டிச.31ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி அதிகாலை 2 மணி வரை இரவு நேர ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. புதுவை அரசு இதற்கான உத்தரவை புதன்கிழமை பிறப்பித்துள்ளது.