மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விடுதலையானார் சசிகலா: 4 ஆண்டு சிறைத் தண்டனை முடிந்தது

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிறகு சசிகலா இன்று (ஜன. 27) விடுதலை செய்யப்பட்டார்.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2021, 5:49 am

DIN

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு சசிகலா இன்று (ஜன. 27) விடுதலையானார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு- பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு இன்றுடன் சிறைத் தண்டனை முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து சசிகலா சிகிச்சை பெற்று வரும் விக்டோரியா மருத்துவமனைக்கு சென்ற சிறைத்துறை அதிகாரிகள் சசிகலாவிடம் கையெழுத்து பெற்று விடுதலையை அறிவித்தனர்.

அபராதத் தொகையான ரூ.10.10 கோடியை செலுத்தியதால், சிறையில் இருந்த நாள்களைக் கணக்கிட்டு சசிகலா தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  சிறைத்துறை நடவடிக்கைகள் முடிந்ததால் மருத்துவமனையில் இருந்த சசிகலாவிடம் விடுதலை ஆனதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.

தண்டனைக் காலம் முடிந்தாலும் சசிகலா விக்டோரியா அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்று அவரது குடும்பத்தினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்தவாறே சிகிச்சை பெற்று பிப்ரவரி முதல் வாரத்தில் சசிகலா தமிழகம் திரும்புவார் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கரோனாவால் கடந்த 20-ம் தேதி விக்டோரியா அரசு மருத்துவமனையில் சசிகலா அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் கண்காணித்து வரும் நிலையில், சசிகலா உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலாவிற்கு இன்று மீண்டும் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் அவருக்கு 'நெகடிவ்' என தெரியவந்தால், சாதாரண பிரிவுக்கு அவர் மாற்றப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுகாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சசிகலா விடுதலையைத் தொடர்ந்து  இளவரசி, சுகாகரன் ஆகியோரும் விரைவில் விடுதலை செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.