தமிழகத்தில் புதிதாக 945 பேருக்கு கரோனா தொற்று
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 945 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 15 பேர் உயிரிழந்தனர்.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வியாழக்கிழமை (நவ.4) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இதையும் படிக்க | தில்லியில் ஒரே மாதத்தில் 1200 பேர் டெங்குவால் பாதிப்பு
புதிதாக 945 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,06,943-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து 1,047 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26,59,407-ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | கேரளத்தில் புதிதாக 6,444 பேருக்கு கரோனா தொற்று
கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 10,895 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாளில் மட்டும் 1,14,043 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.