கேரளத்தில் புதிதாக 34,199 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள சுகாதாரத் துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில்,
கேரளத்தில் புதிதாக 34,199 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,193 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
1,68,383 பேர் தற்போது கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 51,160ஆக அதிகரித்துள்ளது.