திருமங்கலம்: மதுரை திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் - திருமங்கம் சாலையில் குறுக்கே வந்த பைக் மீது மோதிய கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், குலதெய்வ கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பிய தளவாய்ப்புரத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விபத்தில் பலியான 5 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.