சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் திங்கள்கிழமை(ஏப்.28) நடைபெற இருந்த அந்த கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பணியாற்றிய கட்சியினருக்கு
பணம் வினியோக செய்ததில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக பாஜக தலைமைக்கு தொடர்ந்து புகார் வந்து கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவு வருவதற்குள் கட்சிக்குள் இப்படி தொடர்ந்து புகார் வருவது தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என தலைமைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் அண்ணாமலை தலைமையில் திங்கள்கிழமை(ஏப்.28) நடைபெற இருந்த பாஜக ஆலோசனைக் கூட்டம் அதிரடியாக ஒத்திவைக்கப்படுவதாகவும், கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல் கொள்முதல் பிரச்னைக்கு தீா்வுகாண திமுக அரசு முயற்சிக்கவில்லை! - அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழகத்தில் ஒருநாள்கூட நிம்மதியாக விடியவில்லை: அண்ணாமலை

செய்தியாளர்களுக்குப் பதிலளிக்காமல் சென்ற அண்ணாமலை! காரணம் என்ன?
கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



