தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

தலைக்கவசம் அணியாமல் சென்ற பிரசாந்த்துக்கு அபராதம்!

நடிகர் பிரசாந்த் மற்றும் தொகுப்பாளினிக்கு தலா ரூ. 1000 அபராதம்.

News image

இருசக்கர வாகனத்தில் நேர்காணல் கொடுக்கும் நடிகர் பிரசாந்த்

Updated On :1 ஆகஸ்ட் 2024, 6:50 pm IST

தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிய நடிகர் பிரசாந்த்துக்கு சென்னை போக்குவரத்து காவல் துறை அபராதம் விதித்துள்ளது.

நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ். ரவிகுமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்திலும் பிரசாந்த் நடித்து வருகிறார்.

நடிகர் பிரசாந்த் அந்தகன் படத்தின் புரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே, பிரசாந்த் யூடியூப் சேனலுக்கு இருசக்கர வாகனம் ஓட்டிக்கொண்டு தலைக்கவசம் அணியாமல் தொகுப்பாளினியுடன் நேர்காணல் வழங்கியிருந்தார்.

இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இணைய வாசிகள் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற நடிகர் பிரசாந்த் மற்றும் தொகுப்பாளினி ஆகிய இருவருக்கும் தலா ரூ. 1000 அபராதம் விதித்து சென்னை போக்குவரத்து காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.