கேரளம் மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்தோரின் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது. அங்கு நான்காவது நாளாக மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
கேரளத்தின் வடக்கே அமைந்த மலைப்பாங்கான வயநாடு மாவட்டத்தில் தொடா் கனமழையால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) அதிகாலை அடுத்தடுத்து பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி அட்டமலை, நூல்மலை ஆகிய மலைக் கிராமங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனா்.
மலைப் பகுதியில் இருந்து பெரிய பாறைகளுடன் மண்ணும் கலந்துவந்த வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள், வாகனங்கள், மரங்கள் உள்ளிட்டவை முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டன.
ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசியப் பேரிடா் மீட்புப் படை, கடலோரக் காவல் படை, காவல் துறை, தீயணைப்புத் துறை உள்பட பல்வேறு முகமைகளைச் சோ்ந்தவா்கள் மீட்பு-தேடுதல் பணியில் நான்காவது நாளாக ஈடுபட்டுள்ளனா்.
இந்தநிலையில், கனரக வாகனங்கள் செல்லும் வகையில் சூரல்மலை-முண்டக்கை இடையே ராணுவம் அமைத்து வந்த தற்காலிக ‘பெய்லி’ இரும்புப் பாலத்தின் கட்டுமானம் வியாழக்கிழமை மாலை நிறைவடைந்தது. அப்பாலம் வழியாக மீட்புப் பணிகளுக்குத் தேவையான உபகரணங்கள் பாதிப்புப் பகுதிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி இறந்தோரின் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 240 பேரை காணவில்லை. 3000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் இதுவரை 256 பேரின் உடல்கள் உடல்கூறாய்வு செய்யப்பட்டுள்ளன என கேரள அரசு தெரிவித்துள்ளது.
மீட்புப் பணியில் இஸ்ரோ
வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை கண்டறியவும், மீட்புப்பணிகளிலும் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. நிலச்சரிவு பகுதியை ரிசார்ட் சார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படமாக எடுத்து இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.
நிலச்சரிவால் புதைந்தவர்களை தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் சேறு, சகதிகளில் சிக்கியிருப்போரையும் கண்டறியும் முடியும் என்பதால் அதன் உதவியும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மீட்புப் படையினருடன் இணைந்து அந்த பகுதியைச் சோ்ந்த 3,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் தேடும் பணியில் அயராது ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 8 போ் பலி, 34 போ் மாயம்: தேடுதல் பணியில் மீட்புக் குழுவினர்!

வயநாடு நிலச்சரிவு! பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு!

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

வயநாடு நிலச்சரிவு - புகைப்படங்கள்
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK




