குஜராத் மாநிலம் நவ்சாரியில் வசிக்கும் ஒருவர் வீட்டிற்கு ஜூன்-ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.20 லட்சம் என வந்துள்ளது அந்த ஏழை குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே, தறுதலாக மின் கட்டணம் வழங்கப்பட்டுள்ளதை மின்வாரியமே ஒப்புக்கொண்டுள்ளது.
இது குறித்து பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வரும் ஏழை பெண் பங்க்திபென் படேல் கூறியதாவது:
"எங்கள் வீட்டில் நான்கு பேர் வசிக்கிறோம். வீட்டில் நான்கு பல்புகள், நான்கு மின்விசிறிகள், ஒரு ப்ரிட்ஜ் மற்றும் ஒரு டிவி என வீட்டில் குறைந்த அளவு மின்சாதனங்களே உள்ளது. வீட்டில் மூன்று பேர் நாள் முழுவதும் வேலைக்கு சென்றுவிட்டு இரவுதான் வீடு திரும்புவோம்."
எங்கள் வீட்டிற்கு வழக்கமாக இரண்டு மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.2 ஆயிரம் முதல் 2,500 வரை வரும். இந்த முறை ஜூன் - ஜூலை மாதத்திற்கான மின் கட்டணமாக ரூ.20,01,902 வந்துள்ளது. எங்கள் வீட்டிற்கான மின் கட்டணத்தை சரியான நேரத்தில் செலுத்தி வரும் நாங்கள் எங்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் இது தொடர்பாக குஜராத் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, முதலில் முறையான புகாரைப் பதிவு செய்யுமாறு கூறினர். பின்னர் இதுதொடர்பாக மின் வாரிய அதிகாரி ஒருவர் மதிப்பாய்வு செய்ததில் மின் மீட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ள மின்சாரத்தின் அளவு தவறாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அடுத்த ஒரு மணி நேரத்தில் மின் கட்டணம் சரிசெய்யப்பட்டது. இதன் மூலம் பங்க்திபென் படேல் குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருந்து மீண்டு நிம்மதியடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேலத்தில் பேக்கரி உரிமையாளா் வீட்டில் 54 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம் திருட்டு
மின் வாரிய ஊழியா் வீட்டில் 31 கிராம் தங்க நகைகள் திருட்டு

வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?

மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி மே 18 வரை நீட்டிப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



