40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பிரிட்ஜ், டிவி, 4 மின்விசிறிகள் பயன்படுத்தியதற்காக ரூ.20 லட்சம் மின் கட்டணமா?

குஜராத் மாநிலம் நவ்சாரியில் வசிக்கும் ஒருவர் வீட்டிற்கு ஜூன்-ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.20 லட்சம் என வந்துள்ளது அந்த ஏழை குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

News image

குஜராத் மாநிலம் நவ்சாரியில் வசிக்கும் ஒருவர் வீட்டிற்கு ஜூன்-ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.20 லட்சம் என வந்துள்ளது

Updated On :12 ஆகஸ்ட் 2024, 12:09 am IST

குஜராத் மாநிலம் நவ்சாரியில் வசிக்கும் ஒருவர் வீட்டிற்கு ஜூன்-ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.20 லட்சம் என வந்துள்ளது அந்த ஏழை குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே, தறுதலாக மின் கட்டணம் வழங்கப்பட்டுள்ளதை மின்வாரியமே ஒப்புக்கொண்டுள்ளது.

இது குறித்து பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வரும் ஏழை பெண் பங்க்திபென் படேல் கூறியதாவது:

"எங்கள் வீட்டில் நான்கு பேர் வசிக்கிறோம். வீட்டில் நான்கு பல்புகள், நான்கு மின்விசிறிகள், ஒரு ப்ரிட்ஜ் மற்றும் ஒரு டிவி என வீட்டில் குறைந்த அளவு மின்சாதனங்களே உள்ளது. வீட்டில் மூன்று பேர் நாள் முழுவதும் வேலைக்கு சென்றுவிட்டு இரவுதான் வீடு திரும்புவோம்."

எங்கள் வீட்டிற்கு வழக்கமாக இரண்டு மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.2 ஆயிரம் முதல் 2,500 வரை வரும். இந்த முறை ஜூன் - ஜூலை மாதத்திற்கான மின் கட்டணமாக ரூ.20,01,902 வந்துள்ளது. எங்கள் வீட்டிற்கான மின் கட்டணத்தை சரியான நேரத்தில் செலுத்தி வரும் நாங்கள் எங்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் இது தொடர்பாக குஜராத் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, முதலில் முறையான புகாரைப் பதிவு செய்யுமாறு கூறினர். பின்னர் இதுதொடர்பாக மின் வாரிய அதிகாரி ஒருவர் மதிப்பாய்வு செய்ததில் மின் மீட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ள மின்சாரத்தின் அளவு தவறாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அடுத்த ஒரு மணி நேரத்தில் மின் கட்டணம் சரிசெய்யப்பட்டது. இதன் மூலம் பங்க்திபென் படேல் குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருந்து மீண்டு நிம்மதியடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.