தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

பிரிட்ஜ், டிவி, 4 மின்விசிறிகள் பயன்படுத்தியதற்காக ரூ.20 லட்சம் மின் கட்டணமா?

குஜராத் மாநிலம் நவ்சாரியில் வசிக்கும் ஒருவர் வீட்டிற்கு ஜூன்-ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.20 லட்சம் என வந்துள்ளது அந்த ஏழை குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

News image
குஜராத் மாநிலம் நவ்சாரியில் வசிக்கும் ஒருவர் வீட்டிற்கு ஜூன்-ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.20 லட்சம் என வந்துள்ளது
Updated On :11 ஆகஸ்ட் 2024, 6:39 pm

DIN

குஜராத் மாநிலம் நவ்சாரியில் வசிக்கும் ஒருவர் வீட்டிற்கு ஜூன்-ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.20 லட்சம் என வந்துள்ளது அந்த ஏழை குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே, தறுதலாக மின் கட்டணம் வழங்கப்பட்டுள்ளதை மின்வாரியமே ஒப்புக்கொண்டுள்ளது.

இது குறித்து பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வரும் ஏழை பெண் பங்க்திபென் படேல் கூறியதாவது:

"எங்கள் வீட்டில் நான்கு பேர் வசிக்கிறோம். வீட்டில் நான்கு பல்புகள், நான்கு மின்விசிறிகள், ஒரு ப்ரிட்ஜ் மற்றும் ஒரு டிவி என வீட்டில் குறைந்த அளவு மின்சாதனங்களே உள்ளது. வீட்டில் மூன்று பேர் நாள் முழுவதும் வேலைக்கு சென்றுவிட்டு இரவுதான் வீடு திரும்புவோம்."

எங்கள் வீட்டிற்கு வழக்கமாக இரண்டு மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.2 ஆயிரம் முதல் 2,500 வரை வரும். இந்த முறை ஜூன் - ஜூலை மாதத்திற்கான மின் கட்டணமாக ரூ.20,01,902 வந்துள்ளது. எங்கள் வீட்டிற்கான மின் கட்டணத்தை சரியான நேரத்தில் செலுத்தி வரும் நாங்கள் எங்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் இது தொடர்பாக குஜராத் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, முதலில் முறையான புகாரைப் பதிவு செய்யுமாறு கூறினர். பின்னர் இதுதொடர்பாக மின் வாரிய அதிகாரி ஒருவர் மதிப்பாய்வு செய்ததில் மின் மீட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ள மின்சாரத்தின் அளவு தவறாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அடுத்த ஒரு மணி நேரத்தில் மின் கட்டணம் சரிசெய்யப்பட்டது. இதன் மூலம் பங்க்திபென் படேல் குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருந்து மீண்டு நிம்மதியடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.