முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழா்’ விருது வழங்கினார் முதல்வர்!

தமிழின வளா்ச்சிக்கும் பங்காற்றிய காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழா்’ விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கெளரவித்தார்.

News image

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழா்’ விருதை வழங்கி கெளரவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Updated On :15 ஆகஸ்ட் 2024, 10:55 am IST

தமிழின வளா்ச்சிக்கும் பங்காற்றிய காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழா்’ விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கெளரவித்தார்.

சுதந்திர நாளையொட்டி, கோட்டை கொத்தளத்தில் வியாழக்கிழமை (ஆக.15) தேசியக் கொடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்து உரையாற்றினார். முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

சுதந்திர நாள் கொண்டாட்ட விழா மேடையில் தமிழ்நாட்டுக்கும், தமிழின வளா்ச்சிக்கும் பங்காற்றியவா்களைப் பெருமைப்படுத்தும் விதமாக ‘தகைசால் தமிழா்’ என்ற பெயரிலான விருதை காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், இலக்கியவாதியுமான குமரி அனந்தனுக்கு ரூ. 10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அடங்கிய, தகைசால் தமிழா் விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதேபோன்று அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவா்களைப் பெருமைப்படுத்தும் விதமாக சந்திரயான் - 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு டாக்டா் அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிா் நலனுக்காக சிறப்பாகத் தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வா் விருதுகள், முதல்வரின் மாநில இளைஞா் விருதுகள் உள்ளிட்ட விருதுகளையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் விழா மேடையிலேயே வழங்கி கெளரவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மக்களுக்கு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், பல்வேறு புதிய திட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.

சுதந்திர நாளில் மாநில முதல்வர்களே தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு முன்பே பெற்றுக்கொடுத்தவர் தலைவர் கருணாநிதிதான். இதுவும் ஒரு விடுதலை போராட்டம்தான். மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் வேண்டும் என்பதற்காக போராட்டம். அவர் பெற்றுத்தந்த உரிமையின்படியே 4 ஆவது ஆண்டாக நானும் தேசியக்கொடி ஏற்றியுள்ளேன். அதற்காக பெருமை அடைகிறேன் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.