நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு அப்துல் கலாம் விருது வழங்கினார் முதல்வர்!

சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநராக இருந்தவர் தமிழகத்தின் வீரமுத்துவேல்.

News image

விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு அப்துல் கலாம் விருது - TNDIPR

Updated On :15 ஆகஸ்ட் 2024, 10:25 am IST

சந்திரயான் - 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு அப்துல்கலாம் விருதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வழங்கினார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை வியாழக்கிழமை காலை ஏற்றிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து, மக்களுக்கு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், பல்வேறு புதிய திட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.

இதையடுத்து, தமிழ்நாட்டுக்கும், தமிழின வளா்ச்சிக்கும் பங்காற்றியவருக்கு வழங்கப்படும் தகைசால் தமிழர் விருதினை காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், இலக்கியவாதியுமான குமரி அனந்தனுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவா்களுக்கு வழங்கப்படும் டாக்டா் அப்துல் கலாம் விருதினை தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநருமான வீரமுத்துவேலுவுக்கு வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை செவிலியர் சபீனாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.