கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

டெலிகிராம் செயலியின் நிறுவனர் கைது!

டெலிகிராம் செயலியின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டார்.

News image

டெலிகிராம் (கோப்புப்படம்) - DIN

Updated On :25 ஆகஸ்ட் 2024, 3:58 am

டெலிகிராம் செயலியின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டார்.

குற்றச் செயல்களை டெலிகிராம் செயலியின் வழியே நடைபெறுவதை தடையின்றி அனுமதிப்பதாகப் பதிவான வழக்கில் பாவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டின் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

பிரான்ஸ் விமான நிலையத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட பாவெல் துரோவ், ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

39 வயதான துரோவ், பணமோசடி, போதைப் பொருள் கடத்தல் மற்றும் ஆபாசப் பதிவுகளை பகிர்வதற்கு டெலிகிராம் செயலியை பயன்படுத்துவதற்கு ஆதரவாக இருந்த குற்றத்திற்காக பிரான்ஸ் அரசு கைது உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த நிலையில் அஜர்பைஜான் நாட்டிற்கு தனி விமானம் மூலம் சென்றுக்கொண்டிருந்தபோது, பொர்காட் விமான நிலையத்தில் துரோவ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.