வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

விஜய் மீது எந்த சங்கடமும் இல்லை: திருமாவளவன்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தொடர்பாக திருமாவளவன் பேச்சு.

News image

வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன்

Din

Updated On :8 டிசம்பர் 2024, 5:40 am

DIN

விஜய் மீது எந்த சங்கடமும் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

”தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது எவ்வித சங்கடமும் இல்லை. அவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றது மிக்க மகிழ்ச்சி. சூதாட்டத்தை ஆட விரும்புவோர் அரசியல் களத்தில் கலவரத்தை, குழப்பத்தை ஏற்படுத்துவர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குறிவைக்கப்படுகிறது என்பதைவிட திமுக கூட்டணி குறிவைக்கப்படுகிறது என்றே சொல்ல வேண்டும்.

திமுக அழுத்தம் தருகிறது என்றால், முன்னதாகவே விழாவில் பங்கேற்க மாட்டேன் என சொல்லி இருப்பேன். விழாவில் பங்கேற்காதது, நான் சுயமாக எடுத்த முடிவு.

ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகள் கட்சியின் நலனுக்கு எதிராக இருப்பதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

”அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில்கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு கூட்டணிக் கட்சிகளால் அவருக்கு எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிகிறது” என்று தவெக தலைவர் விஜய் பேசியிருந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனால் விளக்கம் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.