பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கனமழையால் ஸ்தம்பித்த சென்னை! நெரிசலில் சிக்கிய வாகனங்கள்!

சென்னையில் போக்குவரத்து நெரிசல் தொடர்பாக...

News image
சென்னையில் போக்குவரத்து நெரிசல்.
Updated On :11 டிசம்பர் 2024, 10:32 am

DIN

சென்னையில் பெய்த கனமழையால் போரூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் வாகனங்கள் சிக்கியது.

வங்கக்கடலில் உருவாக்கியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, சென்னை புறநகர்ப் பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் கோயம்பேடு, போரூர் மேம்பாலம் , நான்கு ரோடு சந்திப்பு முழுவதிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குறிப்பாக, ஐயப்பன்தாங்கலில் இருந்து ராமாபுரம் செல்லக்கூடிய சாலை, போரூர் மேம்பாலம் மீதும், போரூரில் இருந்து வளசரவாக்கம், வடபழனி, கோயம்பேடு ஆகிய செல்லக்கூடிய ஆற்காடு சாலையிலும், போரூரில் இருந்து குன்றத்தூர் செல்லக்கூடிய சாலை என அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து கடுமையாக முடங்கியது.

மெட்ரோ இரண்டாம் கட்ட பாலப் பணிகளாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், அப்பணிகளை விரைந்து முடித்து சாலைகளை சீரமைத்து, போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதேபோல், சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.