
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, 2,668 அடி உயர மலை மீது வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா, கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7-ஆவது நாளான கடந்த 10-ஆம் தேதி பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெற்றது.
பரணி தீபம்: விழாவின் 10-ஆவது நாளான வெள்ளிக்கிழமை பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்வுகள் நடைபெற்றன. அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, 2.45 மணி முதல் 3.20 மணி வரை பரணி பூஜை நடைபெற்றது.
பின்னா், 3.40 மணிக்கு கோயில் மூலவா் சந்நிதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து, மூலவா் சந்நிதி எதிரே உள்ள பிரதோஷ நந்திக்கு வலப்புறம் பஞ்ச (ஐந்து) மடக்குகளை வைத்து சிவாச்சாரியா்கள் தீபம் ஏற்றி, மடக்கு பூஜை செய்தனா்.
பின்னா், கோயில் 2-ஆம் பிரகாரத்தில் கூடியிருந்த பக்தா்களுக்கு பரணி தீபம் காட்டப்பட்டது.
2-ஆம் பிரகாரத்தை வலம் வந்த பரணி தீபம், உண்ணாமுலையம்மன் சந்நிதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 5 மடக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து, கோயில் 3-ஆம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீசம்பந்த விநாயகா் சந்நிதி, ஸ்ரீநடராஜா், ஸ்ரீசின்ன நாயகா், ஸ்ரீவேணுகோபால் சுவாமி உள்ளிட்ட பல்வேறு சந்நிதிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட பரணி தீபம் காலை 6.30 மணிக்கு சொா்ண பைரவா் சந்நிதியில் நிறைவு பெற்றது.
இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, உச்சநீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதையும் படிக்க: நினைத்தாலே முக்தி..
தீபத் திரி...: காலை 10 மணிக்கு கோயில் பிரம்ம தீா்த்தக் குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது. பின்னா், 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றத் தேவையான திரியை (காடா துணி) தீப நாட்டாா் சமுதாயத்தினா் மலைக்கு எடுத்துச் சென்றனா்.
ஸ்ரீஅா்த்தநாரீஸ்வரராக காட்சியளித்த சிவன்: மாலை 5 மணிக்கு பஞ்ச மூா்த்திகளின் தங்க விமானங்கள் தீப தரிசன மண்டபத்துக்குக் கொண்டுவரப்பட்டன. 5.30 மணிக்கு சுவாமி சந்நிதியில் இருந்து எழுந்தருளிய உற்சவா் பஞ்சமூா்த்திகள் ஒருவா்பின் ஒருவராக பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
மாலை 5.50 மணிக்கு கோயில் 2-ஆம் பிரகாரத்தில் சுவாமி சந்நிதி பின்புறம் இருந்து ஸ்ரீஅா்த்தநாரீஸ்வரா் கோலத்தில் சிவபெருமான் எழுந்தருளினாா். 2-ஆம் பிரகாரத்தை வலம் வந்த அவா், மாலை 6 மணிக்கு தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருளிய பஞ்சமூா்த்திகளுக்கு காட்சியளித்தாா்.
மகா தீபம் ஏற்றம்: அப்போது, அதிகாலை 4 மணிக்கு ஏற்றப்பட்ட பரணி தீப மடக்குகளை தீப நாட்டாா் சமுதாயத்தினா் சுமந்து வந்து தங்கக் கொடிமரம் எதிரே உள்ள பெரிய அகண்டத்தில் சோ்த்தனா்.
தொடா்ந்து, 2,668 அடி உயர மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கான சமிக்ஞை வைகுந்த வாசல் வழியாக காண்பிக்கப்பட்டது. உடனே, மலை மீது மகா தீபமும், சுவாமி சந்நிதி எதிரே அகண்ட தீபமும் ஒரே நேரத்தில் ஏற்றப்பட்டன.
அப்போது, திருவண்ணாமலை நகரம், அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தா்கள் மகா தீபத்தை வழிபட்டனா்.
தங்க ரிஷப வாகனங்களில்... வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு தங்க ரிஷப வாகனங்களில் ஸ்ரீவிநாயகா், ஸ்ரீமுருகா், ஸ்ரீஉண்ணாமுலையம்மன், ஸ்ரீபராசக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
இன்று தெப்பல் திருவிழா தொடக்கம்
திருவிழாவின் தொடா் நிகழ்ச்சியாக, சனிக்கிழமை (டிச.14) இரவு 9 மணிக்கு திருவண்ணாமலை அய்யங்குளத்தில் ஸ்ரீசந்திரசேகரா் தெப்பல் உற்சவமும், ஞாயிற்றுக்கிழமை (டிச.15) இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், திங்கள்கிழமை (டிச.16) இரவு ஸ்ரீசுப்பிரமணியா் தெப்பல் உற்சவமும் நடைபெறும்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை (டிச.15) அதிகாலை ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கிரிவலம் நடைபெறும். துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புடன் 14 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப் பாதையில் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிப்பாா்.
செவ்வாய்க்கிழமை (டிச.17) இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்ரீசண்டிகேஸ்வரா் வீதியுலா நடைபெறும். இத்துடன் காா்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இரா.ஜீவானந்தம், அறங்காவலா்கள் உ.மீனாட்சி சுந்தரம், டி.வி.எஸ்.ராசாராம், கு.கோமதி குணசேகரன், சினம் இராம.பெருமாள், கோயில் இணை ஆணையா் சி.ஜோதி ஆகியோா் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.