அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

அமித் ஷா பேச்சு: திருச்சியில் விசிக, காவல்துறையினரிடையே தள்ளுமுள்ளு

அம்பேத்கா் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திருச்சியில் விசிகவினர் ரயிலை மறித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
திருச்சியில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினர் .
Updated On :20 டிசம்பர் 2024, 7:21 am

DIN

திருச்சி: அம்பேத்கா் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திருச்சியில் விசிகவினர் வெள்ளிக்கிழமை ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அம்பேத்கா் குறித்து பேசுவது வழக்கமாகிவிட்டது. அவரது

பெயரை எதிா்க்கட்சியினா் உச்சரிப்பதற்குப் பதிலாக கடவுளின் பெயரைக் கூறியிருந்தால் சொா்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும் என்றாா்.

அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் அமித் ஷா பேசியதாகக் கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்து திமுக சாா்பில் தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து விசிகவினர் வெள்ளிக்கிழமை திருச்சி கிழக்கு மாநகர மாவட்ட செயலாளர் கனியமுதன் தலைமையில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில் நிலையத்திற்கு உள்ளே நுழைய முயன்ற போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது. இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த மறியல் போராட்டத்தில் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளர் பிரபாகரன், இளம் சிறுத்தைகளின் எழுச்சி பாசறை மாநிலத் துணைச் செயலாளர் அரசு, மற்றும் நிர்வாகிகள் வழக்கறிஞர் சதீஷ், மாரியப்பன், கஸ்தூரி, செல்வகுமார், இனியவன், பிரபு, மணிகண்டன், ஞானம், முத்து, சேகர், ஆல்பர்ட்ராஜ், சகாயம், மீரான், பீர்முகமது, ரவிச்சந்திரன், விஜயன் மகளிர் அணி நிர்வாகி கஸ்தூரி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.