25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

இந்தியாவில் குறைந்துவரும் ஒட்டகங்கள்! உயர் அதிகாரி எச்சரிக்கை!

இந்தியாவில் ஒட்டகங்களின் எண்ணிக்கை குறைந்துவருவதாக எச்சரிக்கை விடுத்ததைப் பற்றி..

ஒட்டகம் (கோப்புப்படம்)

Published On :21 டிசம்பர் 2024, 6:29 pm IST

இந்தியாவில் ஒட்டகங்களின் எண்ணிக்கை குறைந்துவருவதாக கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் உயர் அதிகாரி எச்சரித்துள்ளார்.

பாலைவனத்தின் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்கள் நீண்ட காலத்திற்கு தண்ணீர் இல்லாமல் பாலவனத்தில் கடும் வெயிலில்கூட பயணிக்கும் திறன் வாய்ந்தவை. பாலைவனத்தில் இருக்கும் இன்னல்களை சமாளிப்பதற்கு ஏற்றார் போல் அதன் உடலமைப்பு இயற்கையாகவே அமைந்திருக்கும்.

அனல் பறக்கும் பாலைவனத்தில் பயணிக்கும்போது தண்ணீரை அதன் உடலில் சேகரித்து வைத்து தேவைப்படும்போது குடித்துக்கொள்ளும், இயற்கையாக அதற்கு அமைக்கப்பெற்ற கூடுதல் இமைகள் மணல்புயல்களின் போது அதன் கண்களை பாதுகாக்கும்.

அதன் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு ஐ.நா. இந்த ஆண்டு (2024) உலக ஒட்டக இமை வருடமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்தியாவிலுள்ள ஒட்டகங்களின் எண்ணிக்கை குறைந்துவருவதாகவும் அதனால் பாரம்பரிய ஒட்டக பராமரிப்பாளர்களை ஆதரித்து இந்தியாவிலுள்ள ஒட்டகங்களை பாதுகாக்க வேண்டும் எனவும் கால்நடை மற்றும் பால்வளத் துறை செயலாளர் அல்கா உபாத்யாயா எச்சரித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஒட்டகப்பால் உற்பத்தி குறித்த தேசிய முகாமில் பேசிய அவர், கால்நடைகள் மேயும் நிலத்தை பாதுகாக்கவும், அதனை வளர்த்து பராமரிக்கும் மக்களை ஆதரிப்பதிலும் தேசிய கால்நடைத் திட்டம் முக்கிய பங்காற்றிவருவதாக அவர் தெரிவித்தார்.

சுமார் 150 கால்நடை பராமரிப்பாளர்கள் மற்றும் ஒட்டகப்பால் உற்பத்தியாளர்கள் பங்கேற்ற அந்த முகாமில் பண்ணை வளர்ப்பு மற்றும் பால்வளத்தை மேம்படுத்தும் முறைகள் குறித்த விவாதங்கள் நடைபெற்றன.

மேலும், அந்த முகாமில் எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒட்டகப் படையினரும் பங்கேற்றுக்கொண்டனர்.

இந்த முகாமில் ஒட்டகப் பந்தயமும், ஒட்டக அலங்காரப் போட்டியும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.