எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தொடரும் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்; மீனவா்களை பாதுகாக்க வேண்டும்: முத்தரசன் கண்டனம்

தொடரும் கடற்கொள்ளையா்கள் தாக்குதலிலிருந்து தமிழக மீனவா்களை பாதுகாக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா் இரா. முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.

News image
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன்- கோப்புப்படம்
Updated On :22 டிசம்பர் 2024, 2:47 pm

DIN

தொடரும் கடற்கொள்ளையா்கள் தாக்குதலிலிருந்து தமிழக மீனவா்களை பாதுகாக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா் இரா. முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகில் உள்ள ஆறுகாட்டுதுறை பகுதியை சேர்ந்த மீனவர்கள் வெள்ளிக்கிழமை (டிச.20)கோடியக்கரைக்கு தென்கிழக்கு திசையில் கடலுக்கு மீன் பிடித்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அந்தப் பகுதிக்கு வந்த கடற் கொள்ளையர்கள் ஆறு பேர், மீன் பிடித்துக் கொண்டிருந்த மூன்று தமிழக மீனவர்களை தாக்கி, அவர்களது படகுகளை சேதப்படுத்தி ஜிபிஎஸ் கருவி உட்பட மீன்பிடி கருவிகளையும் மீன்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

இதே போல், அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த மீனவர்கள் கா.ராஜ்குமார், கா.ராஜேந்திரன், சென்னையை சேர்ந்த எம்.நாகலிங்கம் ஆகியோர் கோடியக்கரையின் தென் கிழக்கு திசையில் உள்ள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில், அங்கு வந்த ஆறு கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களது படகும், மீன் பிடி கருவிகளையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றுள்ளனர். இதே போல பெருமாள்பேட்டை பகுதியை சேர்ந்த மீனவர்கள் மூன்று பேர் இலங்கை கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் தமிழ்நாட்டு மீனவர்கள் வாழ்வுரிமையை பாதுகாக்க உதவும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் தொடரும் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் அதிகரித்து வருவது ஏமாற்றம் அளிக்கிறது.

கடந்த 16 ஆம் தேதி இலங்கையின் புதிய அதிபர் அநுர குமார திசநாயக புதுதில்லி வந்து, பிரதமர் மோடியை சந்தித்து பேசிய போது, மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பாக பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இலங்கை அதிபருக்கு எக்ஸ் தளம் மூலம் வேண்கோள் விடுத்துள்ளார். ஆனாலும், இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தடுக்கப்படாமல் நீடிப்பது மீனவர்கள் வாழ்வாதாரத்தை அடியோடு நிராகரிக்கும் செயலாக அமைந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசும், பிரதமரும் அரசியல் உறுதியுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு மீனவர்கள் உயிர், உடமைகளும் பாதுகாப்பதுடன், கடலில் அமைதியான சூழலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வர உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.