தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குடிசையில் தீப்பற்றியதில் 2 பேத்திகளுடன் முதியவர் பலி!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் குடிசையில் தீப்பற்றியதில் 2 பேத்திகளுடன் முதியவர் ஒருவர் பலியானதை பற்றி..

News image

கோப்புப்படம்

Updated On :22 டிசம்பர் 2024, 7:41 am

DIN

மத்தியப் பிரதேச மாநிலத்தில் குடிசை வீட்டில் தீப்பற்றியதில், தனது இரண்டு பேத்திகளுடன் 65 வயது முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.

சிவப்புரி மாவட்டத்தில் நேற்று (டிச.21) இரவு 11.30 மணியளவில் குளிர் காய்வதற்காக கொளுத்திய நெருப்பு குடிசையில் பற்றிக் கொண்டதில் அந்த குடிசையினுள் இருந்த ஹஜாரி பஞ்சரா (வயது-65) மற்றும் அவரது பேத்தி சந்தியா (10) ஆகிய இருவரும் பலியாகினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குவந்த மீட்புக் குழுவினர் தீயை அணைத்து, உயிருக்குப் போராடிய அவரது மற்றொரு பேத்தியான அனுஷ்காவை (5) மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், ஆனால் அந்த சிறுமி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக பலியானர்.

இதுகுறித்து அம்மாநில காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் குளிர் காய்வதற்காக கொளுத்திய அடுப்பிலிருந்து பரவிய நெருப்பினால்தான் இப்படியொரு துயரச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச அரசின் சார்பில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் எனவும், அவர்களது இறுதிச் சடங்கிற்கான செலவையும் அரசே ஏற்கும் என பைராடு பகுதி தாசில்தார் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.